Thursday, July 28, 2011

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., புள்ளியியல்




பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், புள்ளியியல்துறை புதிதாக துவங்கப்பட்டுள்ளது.
உற்பத்தி திறனாளிகளின் தரம் அறிதல், கூறு எடுத்தல், மருந்து மற்றும் மருத்துவம் சார்ந்த பரிசோதனை, உயிரியல், பரிசோதனைகள், சுற்றுச்சூழல் கல்வி, பொருளாதார ஆய்வுகள், கல்வி, சமூக அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆராயத்தக்க திறன் வாய்ந்த பட்ட மேற்படிப்பு மாணவர்களை உருவாக்குவது இத்துறையின் நோக்கமாகும். இத்துறையில் புதிய 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு எம்.எஸ்சி., புள்ளியியல் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) துவங்கப்பட்டுள்ளது. இதில், சேருவதற்கான தகுதி பி.எஸ்சி.,யில் புள்ளியியல், கணிதவியல், கணினி அறிவியல் (புள்ளியியல், கணிதம்), பி.சி.ஏ.,வில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (புள்ளியியல், கணிதம்) ஆகியவையாகும். புள்ளியியல் படிப்பில் சேர்ந்து பயில விருப்பம் உள்ளவர்கள் ஜெய்சங்கர், உதவி பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், புள்ளியியல் துறை, பாரதிதாசன் பல்கலை திருச்சி என்ற முகவரியிலும், 94444-69629 என்ற மொபைல்ஃபோன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment