Thursday, July 28, 2011
பள்ளிக்கு வரும் மாணவர்களை வேலை வாங்கினால் கிரிமினல் நடவடிக்கை!
மாணவர்களை டீ, பிஸ்கெட் வாங்கி வரச் சொல்வது, கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்வது போன்ற விரும்பத்தகாத செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்தினால், இனி ஆசிரியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும் என, தொடக்க கல்வித்துறை எச்சரித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியம் விளை கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவர், விளை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது தேவைக்காக, அப்பள்ளியில் பயிலும் மாணவர்களை வெளியில் அனுப்பி டீ, பிஸ்கெட் மற்றும் தின்பண்டங்களை வாங்கிவரச் செய்வதாகவும், ஆசிரியர்களின் வாகனங்களை சுத்தம் செய்தல், ஆசிரியர்களின் கழிவறைக்கு தண்ணீர் கொண்டு வைத்தல், கழிவறையை சுத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கு மாணவர்களை ஈடுபடுத்துவதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கையடுத்து தொடக்கக் கல்வித் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment