
தொலைநிலைக் கல்வி மூலம் விவசாயிகளுக்கான பி.எஃப்.டெக். பட்டப் படிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் விவசாயிகளுக்கான இளநிலை பண்ணை தொழில்நுட்பப் பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நிலத்தைப் பண்படுத்துதல் முதல் அறுவடை வரையிலும், தானியங்களை சேமித்தல், பதப்படுத்துதல், மதிப்பூட்டுதல் வரை அனைத்து தொழில்நுட்பங்களையும் அறிந்துகொள்ளலாம். பயிற் உற்பத்தி, பயிர்ப் பாதுகாப்பு, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மனையியல், வேளாண் பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல், வனவியல், கால்நடை மேலாண்மை, சிறுதொழில் முனைதல், தகவல் தொழில்நுட்பம், பண்ணை பார்வையிடல் ஆகியவற்றை இந்தப் பட்டப் படிப்பில் படிக்கலாம்.
இப்படிப்பில் சேருவதற்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருந்தால் போதும். 27 வயது நிரம்பிய அனைவரும் இந்தப் படிப்பில் சேர முடியும். திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம், கோவை; வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை; வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம்; தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை; வேளாண் அறிவியல் மையம், திண்டிவனம்; வேளாண் அறிவியல் மையம், சந்தியூர் ஆகிய பயிற்சி மையங்களில் இப்படிப்பு கற்றுக்கொடுக்கப்படுகிறது. விண்ணப்பங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் மையங்களில் ரூ.100 செலுத்தி நேரிலோ அல்லது வரவோலை மூலமாகவே பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 3 என்ற முகவரிக்கு பயிற்சிக் கட்டணம் ரூ.7,500க்கான வரைவோலையுடன் அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment