Saturday, July 9, 2011

பள்ளிக்கு வருவதற்கு உதவித்தொகை!

தூரம் அதிகமாக இருப்பதால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துபோகிறது என்பதை புரிந்துகொண்ட இமாச்சல் பிரதேச அரசு அம்மாநில மாணவர்களுக்கு பள்ளிக்கு வந்து படித்துச் செல்ல உதவித்தொகை அறிவித்துள்ளது.
பள்ளியிலிருந்து மூன்றிலிருந்து 5 கி.மீ. தூரம் வரை உள்ள மாணவர்களுக்கு மாதம் இருநூறு ரூபாயும், ஐந்திலிருந்து எட்டு கி.மீ. தூரம் உள்ள மாணவர்களுக்கு மாதம் 300 ரூபாயும் உதவித்தொகை அறிவித்துள்ளது. இதன்மூலம் மாணவர்கள் பள்ளிக்கு கண்டிப்பாக வருவார்கள். பள்ளி இடைநிற்றல் விகிதம் குறையும். தங்கள் மாநிலத்தில் கல்வி அறிவு விகிதம் அதிகரிக்கும் என்று நம்புகிறது இமாச்சல் அரசு. இந்த உதவித்தொகை மூலம் 22,500 மாணவர்கள் உதவிபெருவார்கள். இமாச்சல் பிரதேச மாநிலத்தில் 15 ஆயிரம் தொடக்க மற்றும் மேல்நிலை அரசுப் பள்ளிகள் இருக்கிறது என்பது கூடுதல் தகவல்கள்.

No comments:

Post a Comment