Thursday, July 28, 2011

கடனை திரும்பச் செலுத்த கால நீட்டிப்பு!



உயர்கல்விக்காக வாங்கும் கடனை திரும்பச் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஏழு ஆண்டுகளில் இருந்து, 15 ஆண்டுகளாக விரைவில் நீட்டிப்பு செய்யப்படும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உயர்கல்விக்காக, மத்திய அரசு 43 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களும், உயர்கல்வி படிப்பதற்காக வங்கிகளில் கடன் பெறலாம் என்றும், கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு ஏழு ஆண்டுகள் காலக்கெடுவும் ஏற்கனவே மத்திய அரசு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில் இக்காலக்கெடுவை, 15 ஆண்டுகளாக நீடிக்கச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசு விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment