Thursday, February 10, 2011

இலவசமாக மல்டிமீடியா படிப்பு



பத்து அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இலவசமாக சினிமா சம்பந்தமான தொழில் கல்வியை இலவசமாக வழங்குகிறது மாநில ஆதிதிராவிடர் பழங்குடியின நலத்துறை அமைச்சகம்.
பத்து அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு வேலையில்லா மாணவர்களுக்கு இலவசமாக திரைத்துறை சார்ந்த தொழில்நுட்பம் சார்ந்த ஒரு மாத இலவசப் பயிற்சியை தர தயாராய் இருக்கிறது, தமிழக அரசின் ஆதிதிராவிடர் பழங்குடியின நலத்துறை அமைச்சகம்.
இந்திய அரசின் திரைத்துறை நிறுவனமான நேஷனல் பிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனம் 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் முக்கியப் பணி என்னவென்றால், இந்திய சினிமாவை தரமாகவும் அதே நேரம் தொழில் நுட்பத்தில் சிறந்ததாகவும் உயர்த்திக் காட்டுவதே இந்நிறுவனத்தின் நோக்கம். இந்தியாவில் எந்த மொழியிலும் வெளியான நல்ல தரமான சினிமாவை உலக சினிமா சந்தையில் கொண்டு செல்வதும் இதன் தலையாய பணியாகும். உலக அளவில் நடைபெறும் சினிமா சார்ந்த நிறுவனங்களின் மத்தியில் நேஷனல் ஃபிலிம் டெவலப்மெண்ட் நிறுவனத்திற்கும் தனி மரியாதை உண்டு.
இந்தியாவில் மும்பை, டில்லி, கொல்கத்தா, திருவனந்தபுரம், சென்னை போன்ற பெருநகரங்களில் செயல்படும் இந்நிறுவனம் பிராந்திய மொழி திரைப்படங்களை சிறந்த தொழில்நுட்பத்துடன் வெளிவர பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. அப்பஐ தனித்துவம் வாய்ந்த இந்த நிறுவனம் தற்போது ஒரு மாத கால வீடியோ எடிட்டிங் மற்றும் எடிட்டிங் சார்ந்த சாஃப்ட்வேர் , மல்டிமீடியா குறித்த கல்வியை வழங்க இருக்கிறது. இந்தக் கல்வியை எஸ்.சி. மற்றும் எஸ்.டி மாணவர்கள் முற்றிலும் இலவசமாக கற்றுக்கொள்ள, தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சகம் வாய்ப்பளிக்கிறது.
அந்த வகையில் இந்த இலவச வாய்ப்பை பயன்படுத்துக்கொள்ளும் மாணவர்கள் கண்டிப்பாக எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்களாக இருத்தல் அவசியம். றுபற்றோரின் ஆண்டு வருமானம் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது. கண்டிப்பாக பன்னிரெண்டாம் வகுப்பில்தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 35 வரை இருக்கலாம்.
அதேபோல நேஷனல் ஃபிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தில் ஆடியோ டப்பிங் மற்றும் மல்டிமீடியா படிப்புகளை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் இலவசமாக படிக்க மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பிரிவில் ஒரு மாத இலவச பயிற்சியை பெற விரும்பும் மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருந்தால் போதுமானது. வயது வரம்பு 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் இலவசப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முற்றிலும் தொழில் ரீதியாக நடைபெறும் இந்தப் பயிற்சியை, திறம்பட முடிக்கும் மாணவர்களுக்கு வெள்ளித்திரை அல்லது சின்னத்திரையில் வீடியோ எடிட்டிங், டப்பிங், ஒளிப்பதிவு போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. நேர்முகத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படும்போது, அசல் கல்விச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ், இரண்டு மார்பளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
விவரங்களுக்கு,
போன்: 28192506, 28192407, 28191203.

No comments:

Post a Comment