Thursday, February 10, 2011

சென்னை பல்கலைகழகத்தில் இணைய வகுப்பு திட்டம்


சென்னை பல்கலைக்கழகத்தின் நான்கு வளாகங்களும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏழு கல்லூரிகளும் வீடியோ கான்பரன்சிங் முறையில் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு இடத்தில் நடத்தப்படும் பாடத்தை மற்ற இடங்களில் உள்ள மாணவர்கள் பார்க்க முடிவதுடன், பாடம் நடத்தும் பேராசிரியருடன் உரையாடவும் முடியும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதியுதவியுடன், 6 கோடியே 50லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் வாரத்திற்கு இருமுறை வகுப்புகள் நடத்தப்படும். இதில் 25 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர். அடுத்த கல்வியாண்டில் இத்திட்டம் மேலும் 11 கல்லூரிகளுக்கு நீட்டிக்கப்பட்டு, தினசரி வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார் பல்கலை. துணைவேந்தர் திருவாசகம்.

No comments:

Post a Comment