Thursday, June 30, 2011

ஏழை மாணவர்களுக்கு கல்கி உதவித்தொகை



பள்ளிப் படிப்பு, பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டப் படிப்பு இப்படி அனைத்துப் பிரிவு படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும், ஏழை எளிய மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் கல்வி உதவித்தொகை அளிக்கிறது, அமரர் கல்கி நினைவு அறக்கட்டளை.
வீட்டில் படிக்க வைக்க போதிய வசதி இல்லை. உடல் ஊனம்,இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு ஊடே நன்றாக படிக்க வேண்டும் என்ற சிந்தனை மட்டும் உள்ள தற்போது சிறப்பாக படித்து வரும், ஏழை, எளிய மாணவர்களுக்கு அவர்களின் பள்ளிப் படிப்பு மற்றும் உயர்கல்விக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது அமரர் கல்கி அறக்கட்டளை. இந்த உதவித்தொகைப் பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை மாணவர்கள் தங்கள் கைப்பட ஒரு கடிதம் வடிவில் எழுத வேண்டும். தட்டச்சு மற்றும் கம்ப்யூட்டர் கடிதங்கள் நிராகரிக்கப்படும். பார்வையற்ற மாணவர்கள், பிறர் எழுதித் தர, கைநாட்டு பதிக்கலாம். சிறப்புக் கல்விப் பயிற்சி தேவைப்படும் (ஸ்பாஸ்டிக், டிஸ்லெக்ஸியா குறைபாடுள்ளவர்கள்) மாணவர்கள் சார்பில் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை அனுப்பும்போது, மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் சேர்ந்து படிக்க அனுமதி பெற்றுள்ளது குறித்த தகவல்களை இணைத்து அனுப்ப வேண்டும். தாற்காலிக அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் சேர்ந்துள்ள மாணவர்கள் இந்த உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்க முடியாது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்பதை உறுதிப்படுத்த பெற்றோரின் ஆண்டு வருமானச் சான்றிதழ், கடைசியாக படித்த வகுப்பில் பெற்ற மதிப்பெண் பட்டியல் நகல், மாணவர் படித்த கல்வி நிலையத்தின் முதல்வர் முத்திரை, கையெழுத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
உடல் ஊனமுற்றவர் எனில் அது பற்றிய முழுவிவரம் மற்றும் அதற்கான மருத்துவச் சான்றிதழை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். கூரியரில் அனுப்பக் கூடாது. நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தேவையற்ற சான்றிதழ்களை அனுப்ப வேண்டாம். அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். சான்றிதழ்கள் திருப்பி அனுப்ப முடியாததால், மாணவர்கள் எக்காரணம் கொண்டும் அசல் சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேர்ந்ந்தெடுக்கப்படும் முதுநிலைப் பட்டப் படிப்பு அல்லது ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்கள், பத்து பேருக்கு தலா ரூ.7,500 உதவித்தொகை அளிக்கப்படும். பட்டப் படிப்பு மாணவர்கள் 60 பேருக்கு தலா ரூ.4000, மேல்நிலைப்பள்ளி அல்லது டிப்ளமோ படிப்பு மாணவர்கள், 64 பேருக்கு தலா ரூ.2,500 வீதம் வழங்கப்படும். ஸ்பாஸ்டிக், டிஸ்லெக்ஸியா, ஆட்டிஸ்டிக் போன்ற சிறப்புக் கல்வி பயிற்சி தேவைப்படும் ஐந்து மாணவர்களுக்கு தலா ரூ.5,000 உதவித்தொகை அளிக்கப்படும். இவற்றுள் அமரர் கல்கி படித்த மூன்று பள்ளிகளில் மூன்று மேல்நிலை மாணவர்களுக்கு மூன்று உதவித்தொகைகள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள உதவித் தொகைகளைப் பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: ஜூலை 30.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக அறங்காவலர், கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, புது எண் 14, நான்காவது பிரதான சாலை, கஸ்தூர்பா நகர், அடையாறு, சென்னை - 600020.

No comments:

Post a Comment