Wednesday, August 10, 2011

இந்திய சுதந்திரம் - பொது அறிவு!



காந்தி 1930 ஆம் ஆண்டு தண்டி யாத்திரையை தொடங்கினார்.
· 1848ஆம் ஆண்டு லார்டு டல்ஹௌசி இந்திய கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
· மார்ச் 29, 1857ஆம் ஆண்டு மங்கல் பாண்டே சுதந்திரத்திற்கான முதல் விதையை விதைத்தார்.
· 1857ஆம் ஆண்டு சிப்பாய்க்கழகம் மூலம் சுதந்திரத்திற்கான முதல் போராட்டம் வெடித்தது.
· தேசியப் பாடலான வந்தே மாதரம் முதன் முதலில் 1896ஆம் ஆண்டு பாடப்பட்டது.
· பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்திய சுதந்திரச் சட்டம் ஜூலை முதல் தேதி 1947ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
· சுதந்திரத்திற்கான முதல் கிளர்ச்சி மே 10, 1857ஆம் ஆண்டு ஏற்பட்டது.
· இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் உமேஷ் சந்திர சட்டர்ஜி. இந்திய தேசிய காங்கிரஸ் 1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
· 1908ஆம் ஆண்டு பத்திரிகைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
· இந்தியாவின் தேசிய கீதமான ஜன கன மண முதன்முதலில் 1911ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி கொல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் பாடப்பட்டது.
· 1912ஆம் ஆண்டு இந்திய தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது.
· 1916ஆம் ஆண்டுதான் முதன்முதலில் சரோஜினி நாயுடு காந்தியை சந்தித்தார்.
· அமிர்தசரசில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்னும் இடத்தில்ரெஜினால்ட் டயர் என்னும் ஆங்கிலேயரால் ஏப்ரல் 13, 1919ஆம் ஆண்டு வரலாற்றில் மறக்கமுடியாத படுகொலை நடந்தது.
· திலகர் 1920ஆம் ஆண்டு இறந்ததையடுத்து காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
· 1921ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக காந்தி பொறுப்பேற்றார். அவர் தலைமை பொறுப்பேற்று நடந்த முதல் போராட்டம் ஒத்துழையாமை இயக்கம்.
· 1922ஆம் ஆண்டு சுயராஜ்ஜிய இயக்கத்தை தோற்றுவித்தவர் - சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு
· 1923 ஆம் ஆண்டு உப்பு மீதான வரி விதிக்கப்பட்டது.
· பகத்சிங் 1923ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். அப்போதுஅவருக்கு வயது 23.
· வெள்ளையனே வெளியேறு போராட்டம் குறித்த அறிவிப்பு இந்திய தேசிய காங்கிரஸின் பம்பாய் கூட்டத்தின் போது வெளியிடப்பட்டது.
· 1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷன் இந்தியா வந்தது.
· 1929 ஆம் ஆண்டு லார்டு இர்வின் பிரபு இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்க ஒப்புக்கொண்டார்.
· இந்திய தேசிய காங்கிரஸ் தலைமைப் பதவியில் இருந்து காந்திஜி 1930ஆம் ஆண்டு விலகினார். தலைமைப் பதவி குறித்து தவறுதலான குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் தொடர்ந்து வந்ததால் காந்தி இந்த முடிவை மேற்கொண்டார்.
· 1930 உப்பு சத்தியாக்கிரகம் காந்தி தலைமையில் நடைபெற்றது.
· 1931, 1932ஆம் ஆண்டுகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வட்டமேஜை மாநாடு நடைபெற்றது.
· புனேயில் உள்ள ஆகாகான் கோட்டையில் 1940ஆம் ஆண்டு காந்தி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
· வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்காக சரோஜினி நாயுடு 1942ஆம் ஆண்டு காந்திஜியுடன் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட இந்த சிறைவாசம் 21 மாதம் இருந்தது.
· 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டம் தீவிரமடைந்திருந்த சமயத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் செயல்பாட்டினை ஒலிபரப்பும் வகையில் ரகசியமாக காங்கிரஸ் ரேடியோ ஒலிபரப்பானது. இந்த ரேடியோ ஒலிபரப்பு மூன்று மாதமே செயல்பட்டது. இந்த ரேடியோ ஒலிபரப்பு மும்பையில் சில இடங்களில் இருந்து செயல்படுத்தப்பட்டது. இதை முற்றிலுமாக தொகுத்து ஒலிபரப்பியவர் உஷா மேத்தா.
· காந்திஜியை முதன் முதலில் இந்தியாவின் தந்தை என்று சொன்னவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 1944ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள ஆஸாத்ஹிந்த் ரேடியோவில் சுபாஷ் சந்திரபோஸ் தேச விடுதலை குறித்து உரையாற்றும்போது காந்தியை அவ்வாறு கூறினார்.
· அருணா ஆசாஃப் அலி என்பவர்தான் 1942ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போõராட்டத்தின் கதாநாயகி என்று வர்ணிக்கப்படுகிறார்.
· 1947 ஜூன் 3ஆம் தேதி மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, இந்தியாவை பிரிக்க திட்டம் வகுத்தார்.
· 1947 ஆகஸ்ட் 15 இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது.
· தேசிய கீதம் வங்களா மொழியில் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்டது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இந்தப் பாட்டு தேசிய கீதத்திற்கான அங்கீகாரத்தை இந்திய அரசியலலைப்பு அங்கீகராம் அளித்துள்ளது.
· சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் பால கங்காதிர திலகர்
· இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பிரிட்டிஷின் பிரதமராக இருந்தவர் கிளெமண்ட் அட்லி.
· சாரே ஜஹான்சே அச்சா எனும் சுதந்திர வேட்கையைத் தூண்டும் இந்திப் பாடலை எழுதியவர் முகமது இக்பால்.
· காங்கிரஸில் கட்சியின் மூன்று முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தாதாபாய் நௌரோஜி.
· இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரி.


No comments:

Post a Comment