Monday, May 23, 2011

மாணவர்களுக்கு மகுடம் சூட்டும் பால்ஸ்ரீ

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நாட்டிலேயே தலைசிறந்த விருது பால்ஸ்ரீ விருது. பெரியவர்கள் தங்கள் துறைகளில் சாதிப்பதற்கு எப்படி பத்மஸ்ரீ விருது அளிக்கப்படுகிறதோ, அதேபோல் மாணவர்களின் புதிய படைப்பாக்கத் திறனை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவில் மாணவர்களுக்காக அளிக்கப்படும் நாட்டின் மிக உயரிய விருது இந்த பால்ஸ்ரீ விருது.

முதன் முதலில் 2000 - 2001 ஆம் ஆண்டில்தான் பால்ஸ்ரீ விருதுக்காக தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். 2001ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தமிழ்நாடு அளவில் பால் ஸ்ரீ விருது, 22 மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. பால்ஸ்ரீ விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 9 வயது முதல் 16 வயது வரை இருக்க வேண்டும். பால்ஸ்ரீ விருது போட்டிக்கான அறிவிப்பு ஆண்டுதோறும் ஜூன் மாதம் வெளிவரும்.
பால்ஸ்ரீ விருது போட்டிக்கு, படைப்புத் திறன் அதாவது ஓவியத்திறன், கட்டுரை எழுதும் திறமை, கைவினைப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பு இப்படி ஏதாவது ஒன்றில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் குறிப்பிட்ட ஏதேனும் பிரிவில் திறமைபெற்றவர்களாக இருப்பின், முன்பு ஏதேனும் போட்டியில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழுடன், மாணவர்களின் வயது வரம்புச் சான்றிதழ், பள்ளியில் படிப்பதற்கான ஏதேனும் சான்றிதழை இணைத்து அனுப்ப வேண்டும்.

இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், சேலம், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சென்னையில் இயங்கும் மண்டல அலுவலகங்களை தொடர்புகொண்டு விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். அல்லது ஒரு வெள்ளைத் தாளில் மாணவர்கள் தங்கள் திறமைகள், படைப்புத் திறன் குறித்த குறிப்பை எழுதி, சரியான முகவரி மற்றும் பிறந்த தேதி, படிக்கும் வகுப்பு இவற்றையெல்லாம் குறிப்பிட்டு மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பலாம். விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்யும் மண்டல அலுவலகம், முதல் கட்டமாக மாவட்ட அளவில் மாணவர்களின் திறமையை சோதிக்கும் போட்டியை நடத்தும். இந்தப் போட்டியில் போட்டி நேரத்தில் தலைப்பு கொடுக்கப்பட்டு, அந்தத் தலைப்பிற்கு மாணவர்கள் கட்டுரை, ஓவியம் மற்றும் தங்கள் படைப்புகளை சமர்ப்பிக்க வேண்டும். இப்படி மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்படும் மாணவர்கள், திருவனந்தபுரத்தில் தென் இந்திய அளவில் நடைபெறும் பால்ஸ்ரீ விருது, அரையிறுதி தகுதிச் சுற்றுக்கு அனுப்பப்படுவார்கள். அரையிறுதி சுற்றில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் பாண்டிச்சேரி என்று மூன்று மாநில மாணவர்கள் கலந்துகொள்வார்கள். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் டில்லியில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்துகொள்வார்கள். இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பால்ஸ்ரீ விருது வழங்கப்படும்.

பால்ஸ்ரீ விருதை பொருத்தமட்டில், விருது வாங்குபவர் மட்டுமல்லாமல், தேசிய அளவில் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும், உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகை உள்பட பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது. இந்த ஆண்டில் மாவட்ட வாரியாக முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் 64 பேர். அதில் அரை இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட மொத்த மாணவர்கள் 15 பேர். இதில் அரை இறுதிச் சுற்றில் வெற்றிபெற்று, டில்லியில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த ரம்யா லட்சுமி பால்ஸ்ரீ விருது பெற்றார். இப்போது பால்ஸ்ரீ விருதுபெற்ற மாணவி உள்பட நான்கு மாணவர்கள் மத்திய அரசு வழங்கும் மேல்நிலைக்கல்வி மற்றும் உயர்கல்விக்கான உதவித்தொகைப் பெற தகுதியானவர்கள்தான் என்றார் அவர்.
உயர்கல்வி படிக்க உதவித்தொகை மட்டுமல்லாமல், சிறப்பு வாய்ந்த விருது, நம் படைப்பிற்கான தேசிய அங்கீகாரம் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகப் பெற உங்களுக்கும் ஆசை இருக்கிறதா... இப்போதே பால்ஸ்ரீ விருதுக்கு விண்ணப்பியுங்கள். பால்ஸ்ரீ விருதுக்கு விண்ணப்பிக்க ஜூன் 31ம் தேதிதான் கடைசி என்கிறார் துணை இயக்குநர் ஹேமநாதன்.
இந்தப் போட்டிக் குறித்து விவரங்கள் தெரிந்துகொள்ளவும், விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளவும் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
1. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்ட மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத் துறை, 73 ஏ, மேட்டுத் தெரு, காஞ்சிபுரம் - 2. தொலைபேசி - 044 - 27231339.
2. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி மாவட்ட மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத் துறை, சாரதா கல்லூரி சாலை, சேலம் - 16. றுதாலைபேசி - 0427 - 2442197.
3. ஙருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்ட மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத் துறை, 22/3 சமது பள்ளித் தெரு, காசா மலை நகர், திருச்சி - 20. றுதாலைபேசி - 0421 - 4312423122.
4. கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத் துறை, 5 மணிமேகலை தெரு, முத்தமிழ் நகர், தஞ்சாவூர் - 7. றுதாலைபேசி - 04362 - 240252.
5. மதுரை, ராமநாதபுர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத் துறை, அரசு இசைக்கல்லூரி வளாகம், பசுமலை, மதுரை - 4.
6. ஙருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்ட மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத் துறை, தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய கட்டிட வளாகம், 820/8, டிராக்டர் சாலை, என்.ஜி.ஓ. ஏ காலனி, திருநெல்வேலி - 7, தொலைபேசி - 0462-2553890.
7. சென்னை மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
செயல் அலுவலர், ஜவஹர் சிறுவர் மன்றம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு வளாகம், ஹால்ஸ் ரோடு, சென்னை - 8, தொலைபேசி - 044 - 28192152.

No comments:

Post a Comment